Social Icons

Sunday 1 September 2013

5ம் கலீபா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு

முஆவியா (ரழி) அவர்களுடைய படையும், அவருடைய மகன் யஸீத் அவர்களுடைய படையும் சுவனம் செல்லுமென்று நபியவர்கள் முன்னறிவிப்பு
முஆவியா (ரழி) அவர்களுடைய படையும், அவருடைய மகன் யஸீத் அவர்களுடைய படையும் சுவனம் செல்லுமென்று நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த சுபசோபனத்தை அறிவிக்கும் ஹதீஸ் கீழுள்ளவாறு இடம் பெறுகின்றது.
صحيح البخاري 2924 – أَنَّ عُمَيْرَ بْنَ الْأَسْوَدِ الْعَنْسِيَّ حَدَّثَهُ أَنَّهُ أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهُوَ نَازِلٌ فِي سَاحَةِ حِمْصَ وَهُوَ فِي بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوا قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ قَالَ أَنْتِ فِيهِمْ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ فَقُلْتُ أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا
உபாதா இப்னு ஸாமித்(ரலி) ‘ஹிம்ஸ்’ கடற்கரையில் தம் கட்டிடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம்(ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம்(ரலி) எம்மிடம் அறிவித்தார்கள்.“நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று ஸைப்ரஸ் தீவை)  போர் புரியும் படையினர் சொர்க்கம் புகுவதற்கான தகுதியை  ஏற்படுத்திக்கொண்டனர்’ என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவர்களில் ஒருத்தியா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்று கூறினார்கள். ‘அவர்களில் நானும் ஒருத்தியா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உமைர் இப்னு அஸ்வத் அல் அன்ஸி(ரஹ்)
ஆதாரம் : புஹாரி 2924
மத்தியதரைக் கடலில் முதல் கடல் யுத்தம் செய்த படையினர் முஆவியா(ரழி) அவர்களின் படையாகும். அதைப்போலவே கைஸருடைய நகருக்குள் சென்று போர் புரிந்த பெருமை யஸீத் அவர்களுடைய படைக்கு சேர்கின்றது. அப்படியாயின் இந்த ஹதீஸில் ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று)  போர் புரியும் படையினர் சொர்க்கம் புகுவதற்கான தகுதியை தகுதியை  ஏற்படுத்திக்கொண்டனர்‘ என்று நபியவர்கள் கூறியது முஆவியா (ரழி) அவர்களின் படையையும், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்று நபியவர்கள் கூறியது முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் அவர்களுடைய படையையும் குறிக்கின்றது .
இஸ்லாமிய வரலாற்றில் பல் வேறு சிறப்புக்களுக்குரிய இவ்விரு படையெடுப்புக்களையும் முன்னின்று வழி நடாத்திய பெருமை முஆவியா (ரழி) அவர்களுக்கும், அவர்களின் மகன் யஸீத் அவர்களுக்குமே உரித்தாகும். அபூஅய்யூப் அல் அன்ஸாரீ (ரழி), அப்துல்லாஹிப்னு உமர் (ரழி), அப்துல்லாஹிப்னு ஸுபைர் (ரழி) போன்ற முக்கியமான நபித்தோழர்களும் இப்படைகளிலிருந்துள்ளார்கள். எனவே மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பொன்று நமை விட்டும் மறைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஆவியா (ரழி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் சொன்னவை
அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் முஆவியா (ரழி) அவர்களைப் பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
التاريخ الكبير  1405 عن معمر قال سمعت همام بن منبه عن بن عباس قال ما رأيت أحدا أخلق من معاوية முஆவியாவை விட நற்குணமிக்க ஒருவரை நான் காணவில்லை.
ஆதாரம் : அத்தாரீஹுல் கபீர் 1405
உமர் (ரழி) அவர்கள் கூறும் போது
….اللَّهُمَّ إِنِّى أُشْهِدُكَ عَلَى أُمَرَاءِ الأَمْصَارِ وَإِنِّى إِنَّمَا بَعَثْتُهُمْ عَلَيْهِمْ لِيَعْدِلُوا عَلَيْهِمْ وَلِيُعَلِّمُوا النَّاسَ دِينَهُمْ وَسُنَّةَ نَبِيِّهِمْ -صلى الله عليه وسلم- وَيَقْسِمُوا فِيهِمْ فَيْئَهُمْ وَيَرْفَعُوا إِلَىَّ مَا أَشْكَلَ عَلَيْهِمْ مِنْ أَمْرِهِمْ…’
‘…..யா அல்லாஹ் நகரங்களுக்கு பொறுப்பான தலைவர்கள் விடயத்தில் உன்னை நான் சாட்சியாக்குகின்றேன். அந்தத் தலைவர்களை நான் அனுப்பியதெல்லாம் மக்களிடையே நீதியை நிலை நாட்டுவதற்கும், மார்க்கத்தையும், நபியின் நடைமுறையையும் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கும், யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும், மக்களிடையே ஏற்படும் சச்சரவுகளை எனக்கு எத்தி வைப்பதற்கும்தான்……’ 
அறிவிப்பவர்: அபூதல்ஹா
ஆதாரம் :முஸ்லிம் 1286
உமர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதால் உமர் (ரழி) அவர்களுடைய இந்த துஆவில் அவரும் அடங்குகின்றார்
உமர் (ரழி), உத்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவுக்கு கவர்னராகவிருந்துள்ளார்கள். அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் நீண்ட காலமாக சிரியாவை நிருவகித்துள்ளார்கள். இக்காலப் பகுதிகளில் எந்த வகையிலும் சிரியாவாசிகள் அவருடைய ஆட்சியைக் குறைகூறவோ, அதற்கெதிராகக் கிளர்ந்தெழவோ எதுவும் செய்யவில்லை. அவரின் தலைசிறந்த நிருவாகத் திறமைதான் இதற்குக் காரணமாகும். இதை முஆவியா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ‘என் தோழர்கள் எப்படியென்றால் அவர்கள் பறந்தால் நான் விழுவேன். நான் பறந்தால் அவர்கள் விழுவார்கள்’  அதாவது சரியான முறையில் தான் மக்களை நிருவகித்துள்ளதை அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஒரு முறை நபித்தோழர்களெல்லாம் ரோம், பாரசீக மன்னர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதைப் பார்த்த உமர் (ரழி) அவர்கள் :
عن سعيد المقبري قال قال عمر بن الخطاب تذكرون كسرى وقيصر ودهاءهما وعندكم معاوية‘முஆவியா உங்களுடன் இருக்கும் போதா நீங்கள் ரோம், பாரசீக மன்னர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்’ என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஸஈதுல் மக்பரீ (ரஹ்)
ஆதாரம் : தாரீஹுத் தபரீ (3 – 264)
اريخ بغداد – 1 – 209 )
عن الزهري قال أخبرني عروة بن الزبير ان المسور بن مخرمة أخبره انه قدم وافدا على معاوية بن أبي سفيان فقضى حاجته ثم دعاه فاخلاه فقال يا مسور ما فعل طعنك على الأئمة فقال المسور دعنا من هذا وأحسن فيما قدمنا له قال معاوية لا والله لتكلمن بذات نفسك والذي تعيب علي قال المسور فلم أترك شيئا أعيبه عليه إلا بينته له قال معاوية لا بريء من الذنب فهل تعد يا مسور مالي من الإصلاح في أمر العامة فان الحسنة بعشر أمثالها أم تعد الذنوب  وتترك الحسنات قال المسور لا والله ما نذكر إلا ما ترى من هذه الذنوب قال معاوية فانا نعترف لله بكل ذنب أذنبناه فهل لك يا مسور ذنوب في خاصتك تخشى أن تهلكك إن لم يغفرها الله قال مسور نعم قال معاوية فما يجعلك أحق ان ترجو المغفرة مني فوالله لما الي من الإصلاح أكثر مما تلي ولكن والله لا أخير بين أمرين بين الله وبين غيره إلا اخترت الله تعالى على ما سواه وإنا على دين يقبل الله فيه العمل ويجزي فيه بالحسنات ويجزي فيه بالذنوب إلا أن يعفو عمن يشاء فانا احتسب كل حسنة عملتها بأضعافها وأوازي أمورا عظاما لا أحصيها ولا تحصيها من عمل الله في إقامة صلوات المسلمين والجهاد في سبيل الله عز و جل والحكم بما انزل الله تعالى والأمور التي لست تحصيها وان عددتها لك فتفكر في ذلك قال المسور فعرفت ان معاوية قد خصمني حين ذكر لي ما ذكر قال عروة فلم يسمع المسور بعد ذلك يذكر معاوية إلا استغفر له
அலீ (ரழி) அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் முஆவியா (ரழி) அவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர்களினால் விளைந்த சில தவறுகளை கூறிய மிஸ்வரிப்னு மஹ்ரமா என்ற தாபிஈ  தனது தேவையொன்றுக்காக முஆவியா (ரழி) அவர்களிடம் செல்கிறார். அப்போது முஆவியா (ரழி) அவர்கள் அவரிடம் ‘மிஸ்வரே தலைவர்களைப் பற்றி நீர் என்ன குறைகளைக் கூறினீர்’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘அதை விடுங்கள். நாம் எதற்காக வந்தோமோ அது இதை விட நல்லது’ என்று சொன்னார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘அல்லாஹ் மீது ஆணையாக நீங்கள் என் மீது குறைகண்ட அனைத்து விடயங்களை இங்கு சொல்ல வேண்டும்’ என்று கூறினார்கள். ‘நான் எதையெல்லாம் அவரிடமுள்ள குறையாகக் கண்டேனோ அவையனைத்தையும் அவரிடம் கூறினேன்’ என்று மிஸ்வர் கூறினார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘நான் பாவங்களிலிருந்து நிரபராதியல்ல. மிஸ்வரே எனது நல்ல காரியங்களை விட்டு விட்டு எனது தனிப்பட்ட பாவங்களை நீர் கணக்கிடுகிறீரா அல்லது ஆட்சிப்பொறுப்பில் நான் விட்ட தவறுகளை நீர்  கணக்கிடுகிறீரா’ எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘அல்லாஹ் மீது ஆணையாக உமது தனிப்பட்ட பாவங்களைப் பற்றி நான் பேசவில்லை’ என்று கூறினார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘நாம் செய்த அனைத்துப் பவங்களையும் அல்லாஹ்வுக்காக ஏற்றுக் கொள்கின்றோம். மிஸ்வரே அல்லாஹ் மன்னிக்காவிட்டால் உனக்கு அழிவை ஏற்படுத்தும் என்று நீ பயப்படக் கூடிய  தனிப்பட்ட பாவங்கள் உங்களுக்கு உண்டா’ எனக்  கேட்டார்கள். அதற்கு மிஸ்வர் ‘ஆம்’ என்று கூறினார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘என்னை விட  உங்களை அல்லாஹ் மன்னிக்க வேன்டும் என்று ஏன் நீர் ஆசைப்படுகிறீர். உமக்குள்ள பொறுப்புக்களை விட எமக்குள் பொறுப்புக்கள் அதிகமாகும். அல்லாஹ் மீது ஆணையாக அல்லாஹ்வா அல்லது ஏனையவைகளா என்று வருகின்ற போது அல்லாஹ்வையே நான் தேர்ந்தெடுத்தேன். நன்மைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கூலி வழங்கப்பட்டு, அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டாலே தவிர தீமைகளுக்காகத் தண்டனை வழங்கப்படும் மார்க்கத்தில் நாம் இருக்கின்றோம்…….’ என முஆவியா (ரழி) அவர்கள் மிஸ்வரிடம் கூறினார்கள். அன்றிலிருந்து மிஸ்வரிடம் முஆவியா (ரழி) அவர்களைப் பற்றி கூறப்பட்டால் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுபவராக  இருந்தார்.
அறிவிப்பவர் : உர்வதிப்னு ஸுபைர்
ஆதாரம்:தாரீஹு பக்தாத்
தனது குறை சுட்டிக்காட்டப்பட்ட போது பணிவாக அவற்றை ஏற்றுக் கொண்டு, ஆணவமின்றி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு பதில் கூறிய முறையிலிருந்து முஆவியா (ரழி)  அவர்களின் இறையச்சத்தையும் நிருவாகத் திறமையையும் காணலாம்.
ஆயிஷா (ரழி) அவர்கள் முஆவியா (ரழி) அவர்களைப் பற்றிக் கூறும் போது ‘எனக்கு நீண்ட ஆயுலிருந்தால் அதில் ஒரு பகுதியை முஅவியாவுக்குக் கொடுக்க ஆசைப்படுகின்றேன்.’ என்று கூறனார்கள்.
ஒரு முறை அப்துல்லாஹிப்னு முபாரக் (ரஹ்)அவர்களிடம் உமரிப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் சிறந்தவரா? முஆவியாவா சிறந்தவரா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர் ‘உமரிப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஆயிரம் பேர்தான் வந்தாலும் அவர்களை விட நபியவர்களோடு இருந்த முஆவியா (ரழி) அவர்களின் மூக்கினுள் நுழைந்த தூசி சிறந்தது’ என்று கூறினார்.
تاريخ الأمم والرسل والملوك- الطبري – (3  265)
عن علي بن محمد قال حدثنا أبو محمد الأموي قال خرج عمر بن الخطاب إلى الشأم فرأى معاوية في موكب يتلقاه وراح إليه في موكب فقال له عمر يا معاوية تروح في موكب وتغدو في مثله وبلغني أنك تصبح في منزلك وذوو الحاجات ببابك قال يا أمير المؤمنين إن العدو بها قريب منا ولهم عيون وجواسيس فأردت يا أمير المؤمنين أن يروا للإسلام عزا فقال له عمر إن هذا لكيد رجل لبيب أو خدعة رجل أريب فقال معاوية يا أمير المؤمنين مرني بما شئت أصر إليه قال ويحك ما ناظرتك في أمر أعيب عليك فيه إلا تركتني ما أدري آمرك أم أنهاك 
உமர் (ரழி) அவர்கள் சிரியாவுக்குச் சென்ற போது அலங்கரிக்கப்பட்ட ஒட்டகமொன்றில் சில படை வீரர்கள் புடை சூழ, முஆவியா (ரழி) அவர்கள் வருவதைக் கண்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் முஅவியாவைப் பார்த்து ‘ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தில் வருகிறீர் போகிறீர் ஆனால் வறியவர்கள் உன் கதவடியில் காத்துக்கிடப்பதாக செய்தி கிடைத்துள்ளதே’ என்று கேட்டார்கள்.’ அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் முஃமின்களின் தலைவரே எதிரிகள் நமக்கருகிலுள்ளனர். அவர்களின் ஒற்றரர்களும் ,உளவாளிகளும் நமை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்துக்கென்று ஒரு கௌவரம் இருக்கின்றது, முஸ்லிம்கள் இப்படியெல்லாம் உயர்தரமானவர்கள் என்று அவர்களுக்குக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்கின்றேன்.’ எனக் கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் ‘இது சிந்தனை மிக்க ஒருவர் செய்யும் சதியாகும் அல்லது விவேகியொருவரின் தந்திரமாகும்’ என்று கூறினார்கள். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘முஃமின்களின் தலைவரே நீங்கள் எதை ஏவினாலும் அதைச் செய்ய நான் தயாராகவுள்ளேன்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் ‘நான் எதை உமக்கு குறையாய்க் கண்டாலும் தர்க்கித்து என்னை மிகைத்து விடுகின்றீர் அதனால் உமக்கு எதை ஏவுவது? எதைத் தடுப்பது? என்பது பற்றி எனக்கும் ஒன்றும் புரியவில்லை’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ முஹம்மத் அல் உமவீ
ஆதாரம் : தாரீஹுத் தபரீ (3 – 265)

தொடரும்

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்