Social Icons

Thursday 25 July 2013

உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா


சிலர் சஹர் உணவு உட்கொள்ள வேண்டியதில்லை என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார். 

  1951 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقُلْنَا لَا قَالَ فَإِنِّي إِذَنْ صَائِمٌ ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَقَالَ أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ رواه مسلم    

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை' என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்'' என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்' எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது'' என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.      அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : முஸ்லிம் (2125)  

    உணவு உண்ணாமலும் எதையும் பருகாமலும் இருந்தால் விடிந்த பிறகும் கூட அன்றைய நாளில் உபரியான நோன்பு நோற்பதாக முடிவு செய்ய அனுமதியுள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான நோன்பு நோற்பதாக பகலில் தான் முடிவு செய்கிறார்கள். சூரியன் உதித்த பிறகு சஹர் செய்ய முடியாது என்பதால் நபியவர்கள் சஹர் செய்யாமல் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.      சஹர் செய்ய வாய்ப்பு இல்லாதவர் சஹர் செய்யாமல் நோன்பு நோற்றால் அதில் தவறில்லை என்றே இச்செய்தி கூறுகின்றது. சஹர் செய்ய வாய்ப்பு உள்ளவர் சஹர் செய்து நோன்பு நோற்பதே நபிவழி. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.      

  1923حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً رواه البخاري     

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :      நீங்கள் சஹர் செய்யுங்கள்;  நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது.    அறிவிப்பவர் : அனல் பின் மாலிக் (ரலி)      நூல் : புகாரி (1923)      

  1836حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ رواه مسلم      

 அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் :      நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பது தான்.      இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.     நூல் : முஸ்லிம் (2001)

.onlinepj

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்